உள்நாடு

பொத்துவிலில் சிரமதான நிகழ்வு..!

கட்டுமாணப்பணியாளர்கள் சங்கம்,பொத்துவில்  பிரதேச சபை ஊழியர்கள்  ஒன்றாக இணைந்து பொத்துவில்  சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில்  சிரமதான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பொதுச்சுகாதார பரிசோதகர்.எம். எஸ். எம்.அப்துல் மலீக்கின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்ற இச்சிரமதான நிகழ்வானது சுகாதார வைத்திய அதிகாரி கரியாலய சுற்றுவட்டம் முழுவதும் இடம் பெற்றது.
வைத்திய அதிகாரி உவைஸ் பாறூக் உட்பட ஊழியர்கள், அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரரும் கலந்து கொண்டனர்.
(எம். எப். றிபாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *