உள்நாடு

சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய சாதனை மாணவிகள் கௌரவிப்பு

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய சாதனையாளர்கள் கௌரவிப்பும், விசேட காலை ஆராதனையும் நேற்று (10) பாடசாலை அதிபர் எம்.எஸ். நபார் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது அண்மையில் வெளியான உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக உள்நுழைவுக்கு தகுதி பெற்ற எம்.ஜே. சுஜானா வேகம், ஏ.ஜே.எப். ருஷ்ணிதா மனால், எஸ்.எப் முனிசா ஆகிய மூன்று மாணவிகளும் அவர்களின் பெற்றோர் சகிதம் பாடசாலை சமூகத்தினரால் மாலை அணிவிக்கப்பட்டு சக மாணவர்களின் பெரும் வரவேற்புடன் அழைத்து வரப்பட்டு அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச். றியாசா பிரதான அதிதியாக கலந்து கொண்டு மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் ஏனைய மாணவர்களுக்கும் கல்விசார் சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர் ஏ.றாஸிக், நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்த தொழிலதிபர் எஸ்.எச்.எம். ஜிப்ரி, பாடசாலை பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்விசாரா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *