உள்நாடு

கல்முனை அல்-பஹ்ரியா தேசிய பாடசாலைக்கு புதிய பிரதி அதிபர்.

கல்முனை அல்-பஹ்ரியா தேசிய பாடசாலைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்த உதவி அதிபர் எம்.எச்.ஐ. இஸ்ஸத் அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். பைசால் (SLPS1) தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், பாடசாலை பழைய மாணவர் சங்கச் செயலாளர், நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பாடசாலைக்குப் புதிதாக வருகை தந்த உதவி அதிபர்களுக்கு பாடசாலை சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *