உள்நாடு

உள்நாட்டு வெளிநாட்டு பொருளியல் நிபுணர்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு

நேற்று (10) பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் உள்நாட்டு வெளிநாட்டு பொருளியல் நிபுணர்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஆர்ஜென்டீனாவின் முன்னாள் பொருளாதார அமைச்சரும் கொலொம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான Martin Guzman, மசெசுசெற்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Jayathi Ghosh, ஐக்கிய நாடுகள் புத்தாயிரக் கருத்திட்டத்தின் முன்னாள் பிராந்திய பணிப்பாளர் Charls Abugre, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி Ahilan Kadirgamar உள்ளிட்டோர் அதற்காக வருகைதந்திருந்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த, கலாநிதி அநுர கருணாதிலக, கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, சட்டத்தரணி லக்மாலீ ஹேமசந்திர, சத்துரங்க அபேசிங்க, பொறியியலாளர் எரங்க வீரரத்ன, பேராசிரியர் உபாலி பன்னிலகே மற்றும் பட்டயப்பெற்ற கணக்காளர் சுனில் கமகே ஆகியோர் பங்கேற்றனர்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி, சர்வதேச நாணய நிதியத்தின் இடையீடு, அரசாங்கத்தின் பொருளாதார வழிமுறைகள் பற்றியும் இதன்போது நீண்ட உரையாடல் இடம்பெற்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *