உள்நாடு

பொத்துவில் பிரதேச உயர்தர மாணவர்களுக்கான மாதாந்த கல்வி உதவிப் பணத்தொகை இணைந்த கரங்கள் அமைப்பினால் வழங்கி வைப்பு

பொத்துவில் தொகுதிக்கு உட்பட்ட சரஸ்வதி மகா வித்தியாலயம், தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலயம், கோமாரி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலையில் கல்வி பயிலும் 09 மாணவர்களுக்கு மாதாந்தம் 5000/=வீதம் கல்வி உதவிப் பணம் வழங்கும் நிகழ்வு ஊரணி சரஸ்வதி வித்தியாலயத்தில் அதிபர் திரு. ஐ.மோகன்ராஜ் தலைமையில் (08) இடம்பெற்றது.

இன் நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான காந்தன், சுரேஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான
இணைந்த கரங்கள் அமைப்பின் நிதிப்பங்களிப்புடன் இம் மாணவர்களுக்கான மாதாந்த மேலதிக கல்வி செயற்பாடாக இதனை வழங்கி ஆரம்பித்து வைத்தனர்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *