விளையாட்டு

தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய  பாடசாலையின்  18 வயது கபடி அணியினர்..!

கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை கபடி சங்கம் நடாத்திய தேசிய மட்ட  முதலாவது கடற்கரை சம்பியன்ஷிப்-2024 போட்டிகள் திருகோணமலை கடற்கரை மைதானத்தில் (9) நடைபெற்றது.

நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை முதல்வர் ஏ.அப்துல் கபூர் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலில்
இப் போட்டிகளில் பங்குபற்றிய  நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 18 வயதுப் பிரிவு கபடி அணியினர் தங்கப் பதக்கம் வென்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
(அஸ்ஹர்  இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *