உள்நாடு

தியகல பகுதியில் தனியார் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும்  நேருக்குநேர் மோதியதில்  இருவருக்கு காயம்..!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் வேன் ஒன்றும், தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கி கினிகத்தேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (11) காலை 7.30 மணியளவில் இடம்பெற்று உள்ளது என கினிகத்தேன பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு நேருக்குநேர் மோதி உள்ளது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கினிகத்தேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளதோடு பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பஸ்ஸிற்கும், வேனுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு குறித்த விபத்து காரணம் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *