சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் 2024 கோட்ட மட்ட தமிழ் மொழித் தினப் போட்டிகளில் பெரு வெற்றி..!
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் இம்முறை நடைபெற்ற கோட்ட மட்டத்திலான தமிழ்மொழித் தினப் போட்டிகளில் பங்குபற்றி பெரு வெற்றிகளை ஈட்டியுள்ளனர்.
ஒன்று தொடக்கம் ஒன்பது வரை வகுப்புகள் உள்ள இப்பாடசாலையில் 1ஆம், 2ஆம், 3ஆம் பிரிவு நிலைப் போட்டிகளில் பங்குபற்றி 7 முதலாம் இடங்களையும், 3 இரண்டாம் இடங்களையும், 04 மூன்றாம் இடங்களையும் பெற்று பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
மேற்படி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியைகளுக்கும், பாடசாலையின் அதிபர் எம்.ஐ.சம்சுதீன் மற்றும் பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இப்பாடசாலை இணைப்பாட செயற்பாடுகளில் வருடா வருடம் பல சாதனை வெற்றிகளை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(நூருல் ஹுதா உமர்)