உள்நாடு

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் சந்திப்பு..!

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick)மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் வெள்ளிக்கிழமை(7), கொழும்பு -7 இல்  உள்ள அவரது  உத்தியோகபூர்வ இல்லத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

நாட்டில் நிலவும் விறுவிறுப்பான  அரசியல் சூழ்நிலை, தற்போதைய  களநிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உரிய கவனம்

செலுத்தப்பட்டுள்ளது.
உயர் ஸ்தானிகர் பெட்ரிக் அண்மையில்தான் பிரித்தானியாவின் இலங்கைக்கான இராஜதந்திரியாக கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார்.

 (ஹபீஸ் A.R.A)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *