உள்நாடு

எலுவன்குலம் மறிச்சுக்கட்டி பாதை விரைவில் மக்கள் பாவனைக்கு. அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உறுதி

எலுவன்குலம் ஊடாக மறிச்சுக்கட்டி சிலாவத்துறை வரை நீலும் பாதையை மிக விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உறுதியளித்தார்.

இப் பாதையை மீளத் திறப்பது தொடர்பான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் உத்தியோக பூர்வ இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதே அங்கு சென்றிருந்த தூதுக்குழுவிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச் சந்திப்பில் அமைச்சரின் முஸ்லிம் விவகாரத்துக்கான இணைப்பாளரும் வவுனியா சிறைச்சாலை மேற்பார்வை குழுவின் தலைவருமான நிப்ராஸ் முஹம்மத், டாக்டர் தஸ்லீம், கணக்காளர் தன்ஸீல், பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி தமீம், சட்டத்தரணி அஸ்லம்,நீதியமைச்சு அதிகாரிகளான எல்விடிகல, சட்டத்தரணி பந்துல ஆகியோர் இச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *