உள்நாடு

அட்டாளைச்சேனைக்கு கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா வருகை

அம்பாறை மாவட்டத்திலுள்ள கிரிக்கெட் வீரர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், கடின பந்து கிரிக்கெட் பயிற்சி முகாமொன்று அண்மையில் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளரும் தொழிலதிபருமான ஆதம்லெப்பையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்தப் பயிற்சி முகாமுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா பிரதம அதிதியாகக் கலந்து கொண்துடன், கிரிக்கெட் சபையின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்வுக்கு இப் பிரதேச கழகங்களும் வீரர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வீரர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்காக எதிர்காலத்தில் தங்களது தேவைகளை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.


(எம். எப். நவாஸ் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *