உள்நாடு

காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 102 மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு..!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்துக்குட்பட்ட காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 102 மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
மீரா பாலிகா தேசிய பாடசாலையில் அதிபர் யூ.எல். மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் பங்கேற்று சிறப்பித்தார்.
நிகழ்வில் மட்டக்களப்பு மத்தியில் வலைய கல்வி அலுவலகத்தின் கல்வி பணிப்பாளர் எம்.எம். அப்துல் ஜவாத் உள்ளிட்ட கல்வியாளர்கள், முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் பங்கு என்று சிறப்பித்தனர்.
(எம்.எஸ்.எம். சஜீ)
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *