உள்நாடு

காத்தான்குடி மட்/மம/அல்-ஹிறா மகா வித்தியாலயத்தின் மற்றும் ஒரு சாதனை..!

எமது அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த. உயர்தர விஞ்ஞானப் பிரிவில் முதலாம் அமர்வில் 9 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 9 பேரும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 மாணவர்கள் 3A சித்தியைப் பெற்று மருத்துவத் துறைக்கும் 4 மாணவர்கள் விஞ்ஞானப் பிரிவில் ஏனைய துறைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக விஞ்ஞான துறையில் எமது பாடசாலை 100% சித்தி மற்றும் பல்கலைக்கழக பிரவேசத்தை பெற்றுள்ளது. இது இலகுவில் அடைந்து கொள்ள முடியாத சாதனையாகும்.
இந்த சிறந்த பெறுபேறுகளை இப் பாடசாலை அடைந்து கொள்வதற்கு பங்களிப்புச் செய்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், இந்நாள், முன்னாள் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தனியாக ஆண் மாணவர்களை மாத்திரம் கொண்டு பற்றாக்குறையான பௌதிக வளம், நிதி வளம் மற்றும் ஆளணியுடன் இயங்குகின்ற எமது பாடசாலை எதிர்காலத்தில் சகல வளங்களையும் பெற்று மேலும் சிறந்த சாதனைகளை நிலை நாட்டுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக.
நிருவாகம்
மட்/மம/அல் -ஹிறா மகா வித்தியாலயம்
காத்தான்குடி
(நூர்தீன் MSM)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *