உள்நாடு

பிரபல எழுத்தாளர் சுலைமா ஏ சமி காலமானார்!

தர்காநகர் ,மிஹிரிபென்னையை பிறப்பிடமாகக் கொண்ட நாடறிந்த பிரபல எழுத்தாளர் சுலைமா ஏ சமி அவர்கள் நேற்று (07) காலமானார்.

அவர்,காலம்சென்றவர்களான அப்துல் சமி – உம்மு தமீமா தம்பதியின் புதல்வியாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் சனிக்கிழமை (08) அன்று மாவனல்லை கிரிங்கதெனிய ஜும்மா மஸ்ஜித் மையவாடியில் நடைபெற்றதோடு, அன்னாரின் குடும்பத்தினர், தர்காநகர் ஊர் மக்கள்,எழுத்தாளர்கள் ,ஊடகவியலாளர்கள் மற்றும் இன்னும் பலர் கலந்துகொண்டனர்.

 

(பேருவளை :பீ.எம் முக்தார் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *