உள்நாடு

துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாள்கள்..! வீணாக்காதீர்கள்.

துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாள்களில் இரவுகளையும் பகல்களையும் இறைவழிபாடுகளைக் கொண்டு நிரப்புவது இறைவழியில் ஜிஹாத் செய்வதைக் காட்டிலும் சிறப்பானது.

இதில் பணமும் செலவாவதில்லை. உயிரும் போவதில்லை.

*- இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்)*

மக்கள் துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாள்கள் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றார்கள்.

எனவே இந்த பத்து நாள்களின் சிறப்பைக் குறித்து எடுத்துரைத்து தெளிவுபடுத்துவது அறிஞர்கள் மீதான முக்கியமான பொறுப்பாகும்.

*- இமாம் இப்னு அஸீமீன்(ரஹ்)*

துல்ஹஜ்ஜின் பத்து நாள்களில் மக்கள் எந்த அளவுக்கு இடைவிடாமல் தக்பீர் முழங்கிக் கொண்டிருந்தார்கள் எனில் கரையைத் தொடுவதில் ஓயாத அலைகளைப் போன்று உணர்ந்தேன்.

அற்புதமான இந்த 10 நாட்களை வீணாக்காதீர்கள்.

நன்மைகளை அள்ளிக் கொள்ளுங்கள்.

பாவங்களை கழுவிக் கொள்ளுங்கள்.

அதிகம் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.

இறைவழிபாடுகளில் அதிக நேரம் செலவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *