உள்நாடு

பாணகமுவை அபிவிருத்தி தொடர்பில் ஆளுனர் நஸீர் அஹமட்டை சந்தித்த பாணகமுவை பிரதிநிதிகள்.

பாணகமுவை மக்கள் சமாதான இயக்கம் மற்றும் பள்ளி பரிபாலன சபையின் பிரதிநிதிகள் அண்மையில் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட்டை சந்தித்து பாணகமுவை பிரதேச அபிவிருத்தி மற்றும் கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.

குருநாகல் மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான, பாணகமுவை அந்நூர் மகாவித்தியாலயத்தின் ஒன்பது வகுப்பறைகள் கொண்ட மூன்று மாடிக் கட்டிடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. பாணகமுவை மக்கள் சமாதான இயக்கத்தின் தலைவரும், முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினருமான அல்ஹாஜ் தஸ்லீம், அந்நூர் பாடசாலையின் அதிபர் இர்ஷாத் மற்றும் மற்றும் பள்ளி பரிபாலன சபையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *