உள்நாடு

அ.இ.ஜ. உலமாபுத்தளம் கிளையின் பிறை வழிகாட்டலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தள நகர கிளையின் ஏற்பாட்டில் இன்று 06.06.2024 வியாழக்கிழமை புத்தளம் பெரிய பள்ளியில் பிறை பார்ப்பதற்கான வழிகாட்டல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்நிகழ்வின் தொகுப்பாளராக கொழும்பு பெரிய பள்ளியின் பிறைக்குழு நிர்வாகத்தின் உதவி செயலாளர் அஷ்ஷேக் எம். ஆர். அப்துர் ரஹ்மான் ஹிலாலி ஹஸரத் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் புத்தள நகர எல்லையில் உள்ள அனைத்து மத்ரஸா மாணவர்கள் மற்றும் உஸ்தாத்மார்களும் கலந்து கொண்டனர்.

1. புகாரிய்யா மத்ரஸா (நாகவில்லு)
2. மிஸ்பாஹூல் உலூம் (ரத்மல்யாய)
3. முஹாஜிரீன் மத்ரஸா( தில்லேடி)
4. காஸிமீய்யாஹ் மத்ரஸா
5. இஹ்யாவுல் உலூம் மத்ரஸா
6. அப்துல் மஜித் எகடமி
7. அஷ்ரபிய்யாஹ் மத்ரஸா
8. தாருல் குர்ஆனுல் க்ரீம் மத்ரஸா

ஏனைய உலமாக்கள் சமூக நலன்விரும்பிகள் மற்றும் இதுவரைக்கும் பிறைப்பார்த்து வந்த குழுக்களும் சுமார் 125 நபர்கள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நகர கிளையின் உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்காக உதவி செய்த அனைவரையும் அல்லாஹூதாஆலா கபூல் செய்வானாக ஆமீன்

பிறை உபக்குழு
அஷ்ஷேக் அமீன் (அர்ரஹ்மானி )
அஷ்ஷேக் ரகீப் அஹ்மத் (அர்ரஷாதீ)

(ஊடகப்பிரிவு)

அகில இலங்கை,
ஜம்இய்யத்துல் உலமா ,
புத்தள நகர கிளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *