உள்நாடு

காலநிலை சீர்கேட்டினால் 30 பேர் பலி.

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை 30 ஆக உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, உயிரிழந்தவர்களின் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மற்றொரு இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இறுதிச் சடங்குகளுக்காக 25,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவலவின் கேள்விக்கு பதிலளித்த அவர், 71 வீடுகள் முழுமையாகவும், 93,770 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மதிப்பிடும் பணியை முடித்த பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *