உள்நாடு

வடமேல் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களில் பதவி உயர்வு பெற்றோருக்கான நியமனம் வழங்கல்.

மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் வடமேல் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் சிரேஷ்ட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றோருக்கான நியமனக் கடிதங்கள், நேற்று (03) காலை வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

வடமேல் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையில் கடமையாற்றியோர் மத்தியில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் சிரேஷ்ட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இதன் போது கௌரவ ஆளுனரினால் வழங்கி வைக்கப்பட்டது.

அதன்போது கருத்து வெளியிட்ட வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள், சகல துறைகளிலும் வடமேல் மாகாணத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாட்டில் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை எதிர்பார்க்கின்றேன் என்றும், நாட்டுக்கும் மாகாண மக்களுக்கும் குறிப்பிடத்தக்க வகையில் சேவையாற்றுவீர்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், வடமேல் மாகாணத்தின் நிர்வாக சேவை உள்ளிட்ட அனைத்து அரச துறைகளையும் சீரான முறையில் நடத்திச்செல்ல விசேட கவனத்தைச்செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வடமேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் , மாகாணத்தின் பிரதம செயலாளர் திருமதி தீபிகா குணரத்தின , ஆளுனரின் செயலாளர் எம்.ஐ. இலங்கக்கோன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *