உள்நாடு

ரணிலின் பொருளாதார மாற்ற சட்ட முன்மொழிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் தேசிய மக்கள் சக்தி..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரேரணைக்கு அமைவாக அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள பொருளாதார மாற்ற சட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றில் நேற்று (03) பிற்பகல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபையின் உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் மனுதாரர்களாகவும், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினரும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க அடங்கலாக சட்டத்தரணிகளும் இதில் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *