உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் கல்பிட்டி அமைப்பாளராக J.M. தாரிக் நியமனம்.

கல்பிட்டி பிரதேச சபையின் முன்னால் எதிர் கட்சி தலைவரும், கல்பிட்டியின் பிரபலமான அரசியல்வாதியுமான J.M. தாரிக் ஐக்கிய தேசிய கட்சியின் கல்பிட்டி அமைப்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து நியமனக்கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

நேற்று முன்தினம் ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு அக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றிருந்தது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் கைகளால் கல்பிட்டி( கல்பிட்டி பிரதேச சபை தேர்தல் வட்டாரம் 01)ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருக்கான நியமனக்கடிதம் முன்னால் கல்பிட்டிப் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரான J.M. தாரிக்கிற்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர் ரங்கே பண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(ரிஸ்வி ஹுசைன் – கல்பிட்டி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *