உள்நாடு

உயர் தர பரீட்சையில் தேசிய, மாவட்ட மட்டங்களில் சாதனை படைத்த காத்தான்குடி மாணவர்களுக்கு கெளரவம்..!

உயர் தர பரீட்சையில் தேசிய, மாவட்ட மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(02) ஞாயிறுக்கிழமை காலை காத்தான்குடி ஊடக அமையத்தில் நடைபெற்றது.
வாரவலம் ஊடக வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.ஹாதி, கெளரவ அதிதியாக இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சீ.ஏ அசீஸ், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்புச் செயலாளர் சட்டமாணி எம்.றுஸ்வின் , சமூக ஆர்வலர் ஏ.எல். மீராசாஹிப் முன்னாள் நகரசபை உறுப்பினர் ஹில்மி அகமட் லெப்பை உட்பட ஊரின் முக்கியஸ்தகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பொறியியல் தொழில் நுட்ப பிரிவில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது இடத்தினையும் பெற்ற அஹ்மத் ஷாகிர் முகம்மது ஷப்வான் அதே போல் வைத்திய துறையில் மாவட்டத்தில் முதலாவது இடத்தினையும் பெற்ற முகம்மது பாறூக் நஹ்ஜுல் பாதீக், வர்த்தக பிரிவில் முதலிடம் பெற்ற நவாஸ் யூசுப் ஆகியோர் பொண்ணாடை போர்த்தி நினைவு பரிசில்கள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டனர்.
(எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *