உள்நாடு

பாத்திமா நிஹ்லாவுக்கு தர்காநகரில் கெளரவம்.

இவ் வருடம் வெளியான கா.பொ.த.உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் நான்காம் இடத்தையும், களுத்துறை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்று பேருவளைக்கு புகழ் சேர்த்த பேருவளை ஸேம் ரிபாய் ஹாஜியார் தேசிய பாடசாலை மாணவியான கே.எப்.பாத்திமா நிஹ்லாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று 2ஆம் திகதி மாலை தர்கா நகர் விஞ்ஞான கல்வி செயல்திட்டத்தின் ஏற்பாட்டில் இஷாஅத்துல் இஸ்லாம் சிறுவர் அபிவிருத்தி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

தர்கா நார விஞ்ஞான கல்வி செயல்திட்ட ஸ்தாபகரும் ரூமி ஹாஷிம் பவுண்டேஷன் தலைவருமான டொக்டர் ரூமி ஹாஷிம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புத்திஜீவிகள்,விஞ்ஞான கல்வி செயற்திட்ட ஆசிரியர்கள் நிர்வாகிகள்,பிரமுகர்கள் மற்றும் இம்முறை பரீட்சையில் சித்தியடைந்து வைத்திய பீடங்களுக்கு தெளிவாகும் நிலையில் உள்ள மாணவர்கள் பங்கு பெற்றனர்.

மாணவியின் முயற்சி சாதனைகளை இங்கு உரையாற்றிய பலரும் பாராட்டி பேசியதோடு தர்கா நகர் விஞ்ஞான கல்வி செயற்திட்டத்தின் சார்பில் மாணவிக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டன. டாக்டர் ரூமிஹாஷிம்,அதன் செயலாளர் அல்-ஹாஜ் ஜெஸூக் அஹமத் மற்றும் மேற்படி கல்வி நிலைய ஆசிரியர்கள் இணைந்து வழங்கினர்.


(படங்கள் – பேருவளை பீ.எம்.முக்தார்)|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *