வெள்ளத்தில் மூழ்கியுள்ள வெலிப்பன்னை உட்பட களுத்துறையின் தாழ் நில கிராமங்கள்..!
களுத்துறை மாவட்டத்திலுள்ள வெலிப்பன்னை நகரம் உட்பட தாழ் நில கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
31-ஆம் திகதி பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளன. வெலிப்பன்னை ஆற்றின் நீர்மட்டமும் அதிகரித்தமையினால் தாழ்ந்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்தினால் வெலிப்பன்னையில் பண்ணையில் பல முஸ்லிம் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
ஆறுகள்,குளங்கள்,நீரோடைகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளன.
அடை மழை காரணமாக இம் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன இரப்பர் தோட்டங்களில் பால் சேகரிப்பு சீவல் தொல்லைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
ரப்பர் பால் சேகரிக்கும் பணி ஸ்தம்பிகமடைந்துள்ளதனால் தோட்டங்களில் தொழில் இன்று தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடற்றொழில் துறையும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(பேருவளை பீ.எம்.முக்தார்)