உள்நாடு

புத்தள மாவட்ட மௌலவி ஆசிரியர்களுக்கான விஷேட கருத்தரங்கு

கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ள புத்தள மாவட்டத்தின் மௌலவி ஆசிரியர்களின் ஆளுமையை விருத்தி செய்வதற்கான கருத்தரங்கு எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இடம்பெறவுள்ளது.

புத்தளம் மாவட்ட மௌலவி ஆசிரியர்களுக்கான மேற்படிக் கருத்தரங்கில் அரபு மொழி மற்றும் அரபு இலக்கிய தகமைகளை மேம்படுத்தும் நோக்கில் இக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இக் கருத்தரங்கு எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை புத்தளம் சாஹிராக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதான கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் இக் கருத்தரங்கினை கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடகத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *