உள்நாடு

இளம் ஊடகவியலாளருக்கான விருது பெற்றார் ஸாபித் துல்பிகார்

தினகரன் பத்திரிகையின் 92 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ,கடந்த 25 ஆம் திகதி பேருவளை ஸேம் ரிபாய் ஹாஜியார் தேசியப் பாடாலையில் நடைபெற்ற முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு விழாவில், பேருவளை நியூஸ் ஊடக வலையமைப்பின் தலைவர் ஸாபித் துல்பிகாருக்கு இளம் ஊடகவியலாளருக்கான விருது வழங்கி வைக்கப்பட்டது.

பேருவளை பிரதேசத்தின் டிஜிட்டல் ஊடகத்துறையின் வெற்றிடத்தை நீக்கி, இலங்கை வெகுஜன ஊடக அமைச்சின் அங்கீகாரம் பெற்று இயங்கிவரும் பேருவளை நியூஸ் ஊடக வலையமைப்பானது, ஓர் இளம் நிர்வாகக் குழுவினால் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *