உள்நாடு

கல்முனை சுபத்திரா ராமய விகாரையின் தேவைகள் பற்றி கேட்டறிந்த ஹரீஸ் எம்.பீ

கல்முனை சுபத்திரா ராமய விகாரைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் திடீர் விஜயமொன்றை இன்று (31) மேற்கொண்டு சுபத்திரா ராமய விகாரை வளாகத்தை பார்வையிட்டதுடன் தேவைகள் தொடர்பாக கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன் போது எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தான் உதவுவதாக கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் இடம் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *