உள்நாடு

வெலிகாமம் புதிய தெரு ஷாதுலிய்யா இளைஞர் முன்னணி வருட பூர்த்தியும், அலுவலக திறப்பும்..!

வெலிகாமம் புதிய தெரு ஷாதுலியா இளைஞர் முண்ணணியின் 14வது வருட பூர்த்தி நிகழ்வு புதிய அலுவலக திறப்பு வைபவமும் எதிர்வரும் (1-6-2024) மாலை மஃரிப் தொழுகையுடன் ஆரம்பமாகும்.

தலைவர் எம்.ஆர்.முஹம்மத் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் மேற்படி முன்னணியின் ஆலோசகரும் முர்ஸியா அரபுக் கல்லூரி அதிபருமான மௌலவி அல்-உஸ்தாத் என்.எம்.எம்.அஸ்கின் (முர்ஸி – ரயீஸுல் முகத்தம்) விசேட பேச்சாளராக கலந்து கொள்வார் என செயலாளர் முகத்தமுஷ்ஷாதுலி எம்.எப்.முஹம்மத் தெரிவித்த.

14 வருட பூர்த்தியையெட்டிய மற்றுமோர் நிகழ்வு (30-5-24) இடம் பெற்றது. ஷாதுலிய்யா தரீக்காவின் வளர்ச்சிக்காக இவ்வமைப்பானது பல செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதாகவும் செயலாளர் மேலும் கூறினார்.

கலீபதுஷ்ஷாதுலிகளான அஸ்ஸெய்யித் மௌலவி அலவி ஸாலிஹ் மௌலானா (முர்ஸி) மௌலவி பிஷ்ர் அஜ்வாத் (பஹ்ஜி) முர்ஸியா அரபுக் கல்லூரி அதிபர் மௌலவி அஸ்கின் (முர்ஸி) உட்பட கலீபாக்கள்,ஷாதுலியா முக்கியஸ்தர்கள்,உலமாக்கள்,ஊர் மக்களின் பூரண பங்களிப்புடன் இளைஞர்களை ஒன்று திரட்டி இவ்வமைப்பு முன்னேற்றப்பாதையில் வீறுநடை போடுவதாகவும் முர்ஸியாவின் முன்னாள் அதிபர் மர்ஹூம் கலீபதுஷ்ஷாதுலி மௌலவி சுல்தான் ஏ.முஹியித்தீன் (பஹ்ஜி)யின் பங்களிப்பையும் இவ் வேளையில் நன்றியுணர்வுடன் நினைவு கூறுவதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *