Saturday, October 5, 2024
Latest:
உள்நாடு

பதுரியா மத்திய கல்லூரியில் சஞ்சிகை வெளியீடு

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் விஞ்ஞான பிரிவின் வெளியீடான”பெரகன்” சஞ்சிகையின் இரண்டாவது பதிப்பின் வெளியீடு நேற்று அதிபர் ஏ. எல் .ஏ ரஹ்மான் அவர்களின் தலைமையில் நாகூர்கம நியூமினி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக பிரபல குழந்தை நல மருத்துவரும், எழுத்தாளரும், பேச்சாளருமான எம். எல்.ரைஸ் முஸ்தபா,விசேட அதிதியாக,சப்ரகமுவ பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சர்வதேச ரீதுக்கு நிகராக இந்த நூல் வெளிவந்திருப்பதாக பிரதம அதிதி தனது நூல் விமர்சனத்தில் தெரிவித்ததோடு இதில் ஆசிரியர்கள் பெற்றோர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

(பாரா தாஹீர்)
(படங்கள்- ஹம்தான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *