உள்நாடு

23 வருட பூர்த்தியை கொண்டாடிய ஆயிஷா சித்தீக்கா

மாவனல்லை ஆயிஷா சித்தீக்கா உயர் கல்விக்கூடம் ஆரம்பிக்கப்பட்டு,23 வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகள் வைத்தியர் ரைஸ் முஸ்தபா அவர்களின் தலைமையின் கீழ் வளாக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதன் ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் எம்.ஏ.எம்.நிஸ்தார் அவர்களின் ஒருங்கிணைப்பில்,இவ் உயர் பீடத்தின் ஸ்தாபக தலைவர் ,காலஞ் சென்ற மௌலவி ஏ.எல். எம். இப்றாஹீம் அவர்களுக்கான நினைவு முத்திரையும் ,அவரைப் பற்றிய நினைவு நூலும்,புதிய வகுப்பறை கட்டிடமும்,மாணவியருக்கான முதலாவது நவீன தப்ஸீர் விளக்கக்கூடமும் இவ் நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டன.

இதில் சிறந்த ஆளுமையுள்ள மாணவியருக்கும்,இப்பிரதேசத்தில் சிறந்த விளங்கிய விஷேட பிரமுகர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டன . இதில் பிரதம அதிதியாக ஒஸ்தாத் எம்.ஏ.எம்.மன்சூர் அவர்களும்,அதிதிகளாக முன்னாள் முஸ்லிம் கலாச்சார திணைக்கள பணிப்பாளர் பைசல் ஆரிப்தீன்,A.S.P. கப்பார்,ஒஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்,மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


(பாரா தாஹீர் – மாவனல்லை செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *