விளையாட்டு

கத்தாரில் தமிழர்கள் குடும்பத்தோடு பங்குபற்றிய மாபெரும் எறிபந்து போட்டி

கத்தார் தமிழ் இளைஞர் விளையாட்டுச் சங்கம் நடத்திய மாபெரும் எறிபந்து (THROW BALL) போட்டியானது கடந்த வெள்ளிக்கிழமை (24) தமிழ் இளைஞர் விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் GSR.சத்தியராஜ் அவர்களின் தலைமையில் ஈரானிய பாடசாலை அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியானது ஆண்கள், பெண்கள் என 11 குழுக்களாக நடைபெற்றது. இப்போட்டியிலே கத்தாரில் உள்ள முக்கியஸ்தர்கள், கத்தாரில் உள்ள தமிழ் அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் குடும்பமாக 700க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்கள்.

இப்போட்டியிலே பெண்கள் குழுவில் கத்தார் ஸ்டனர்ஸ் குயின் அணி முதலாம் இடத்தை பெற்று சாம்பியனானது. இரண்டாம் இடத்தை கத்தார் சிங்க பெண்கள் அணி பெற்றுக்கொண்டது. ஆண்கள் குழுவில் கத்தார் ஸ்டன்னர் கிங் அணி முதலாம் இடத்தைப் பெற்று சாம்பியனானது. இரண்டாம் இடத்தை கத்தார் தமிழ் Fighters அணி பெற்றுக்கொண்டது. மேலும் இப்போட்டியிலே பார்வையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

(ஜே.எம்.பாஸித் – கத்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *