உள்நாடு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றிருந்தது. இப் பரீட்சையில் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதும் பின்வரும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

– www.doenets.lk

– www.results.exams.gov.lk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *