உள்நாடு

கார் விபத்தில் ஓட்டமாவடியையைச் சேர்ந்த குடும்பம் காயம்…!

கொழும்பில் இருந்து ஓட்டமாவடி நோக்கி பயணித்த கார் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புனானை பிரதேசத்தில் வைத்து நேற்று(திங்கள்கிழமை) காலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடியை சேர்ந்த எம்.எஸ்.ஹலால்தீன் தனது குடும்பத்தாருடன் கொழும்பு  சென்று திரும்பி வரும் வழியில் இன்று  புணானை கெம்பஸ் பகுதியில் வைத்து விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த ஹலாலல்தீனின் மனைவியான பௌசினாபானு (வயது 35) வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காரில் பயணித்த ஹலால்தீன் மற்றும் மூன்று பிள்ளைகளுக்கும் சிறு காயங்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் இருந்து சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
விபத்திற்கான காரணம் கார் வீதியை விட்டு விலகியமையே காரணம் என்று போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து நடைபெற்ற இடத்திற்கு மேலதிக உதவிக்காக ஓட்டமாவடி அகீல் எமெர்ஜென்ஷி வாகனம் சென்று காயமடைந்தவர்களையும் வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஹலால்தீன் ஹாஜியார் என்பவர்  சமூகப் பணிகளில் ஈடு பட்டு தன்னாலான பல உதவிகளை செய்யும்யும் ஒருவர்.
ண்மையில் மீராவோடை மீராஜூம்மா பள்ளிவாயல் மேல்மாடி கட்டுவதற்கான நிதியையும் சேகரித்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *