உள்நாடு

பிரான்ஸ் தூதுவர் மரணம் – விசாரணைகள் துரிதம்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்சுவா பக்டெட் திடீர் சுகவீனம் காரணமாக 53வது வயதில் ராஜகிரியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் காலமானார்.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தில் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான துணை தூதுவராக பணியாற்றிய இவர் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவராக பணியாற்றியுள்ளார்.

இதற்கு முன்னர் அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திலும் (2012-2016), பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோவுக்கான பிரான்ஸ் நிரந்தர பிரதிநிதித்துவத்திலும் நியமிக்கப்பட்டார். மேலும் பிரான்சின் வெளியுறவு அமைச்சகத்தில் பிரதி செய்தித் தொடர்பாளராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராஜகிரிய போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *