உள்நாடு

வேகந்த ஜூம்ஆ பள்ளியில் ரைசிக்கு ஜனாஸா தொழுகை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெலி விபத்தில் அஜர்பைசான் எல்லையில் அகால மரணமடைந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைஸி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காகவும் கொழும்பு 2 கொம்பனி வீதியில் உள்ள் வேகந்த ஜூம்ஆப் பள்ளிவாசலில் நேற்று ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஜனாசாத் தொழுகையும் துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஈரான் நாட்டின் இலங்கைத் தூதுவர் ஆலயத்தின் சாஜிடி அபயார், கொழும்பு ஈரான் கலாச்சார நிலையத்தின் பணிப்பாளருமான கலாநிதி பஹ்மன் மொசாமி, ஈரான் சார்பாக கலந்து கொண்டு ஜனாசாத் தொழுகையிலும் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் ஜனாசாத் தொழுகையை மௌலவி மௌலானா நசீர் புஹாதீனும், துஆப் பிராத்தனையை மின்ஹாஜ் அமீர் மனாஹிப் மொளலவியும் நிகழ்த்தினார்கள். இந் நிகழ்வில் பள்ளிவாசல் பரிபலான சபைத் தலைவர் மற்றும் செயலாளர் இப்பிரதேச வாழ் மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *