உள்நாடு

கிழக்கில் 700 ஆசிரியர்கள் நியமனம்; ஆளுனருக்கு கல்வி அமைச்சர் அனுமதி.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (24) இடம் பெற்றது.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பில் கடந்த சில மாதங்களாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் பலமுறை கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த உதவும் பாடம் சார்ந்த 700 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு தேவையான அனுமதிகளை ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *