உள்நாடு

கல்பிட்டி நகரை அலங்கரித்த பெரஹராவும், அன்னதானமும்.

கல்பிட்டி பௌத்த தேவாலயத்தின் புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நிகழ்வும், வெசாக் பண்டிகையை முன்னிட்டு பெரகர நிகழ்வும் நேற்று (24) மிக விமர்சையாக இடம்பெற்றது.

பல வருடங்கள் பழமைவாய்ந்த கல்பிட்டி பௌத்த தேவாலயத்தில் விகாரை புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இன்றைய தினத்தில் மக்கள் புடை சூழ தூபிக் கலசம் வைக்கப்பட்டு விகாரை மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டது.

அத்துடன் புனித வெசாக் பண்டிகையை முன்னிட்டு கல்பிட்டி பிரதான வீதியின் ஊடாக கல்பிட்டி நகரை பெரகரா நிகழ்வு அலங்கரித்திருந்தது. இந்நிகழ்வில் கல்பிட்டி பிரதேசத்தில் இருக்கும் பெருந்திரளான மக்கள் மத பேதமின்றி கலந்து கொண்டனர்.

மேலும் இன்றைய தினத்தில் கல்பிட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் , பிரதேச சபையினுடைய செயலாளர் மங்கள ராமநாயக்க தலைமையில் வெசாக் தின விசேஷ சவ்வரிசிக் கஞ்சி அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


(ரிஸ்வி ஹூசைன்- கல்பிட்டி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *