உள்நாடு

கொழும்பில் தீவிரமடையும் டெங்கு.

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24227 டெங்கு நோயாளர்கள் அiயாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் க்டுப்பாட்டுப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையின்படி கடந்த ஏப்ரல் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2234 ஆக பதிவாகியிருந்ததுடன் இம்மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1954 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் கொழும்பு மாவட்டத்திலே அதிகளவான ஙெ;கு நோயாளர்கள் பதிவாயுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் குறித்த மாவட்டத்தில் 5183 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *