உள்நாடு

தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் யாழ் வைத்தியசாலை.

வடக்குக்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ் வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கான மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இதன் மூலம் வடக்கு பிரதேசத்தில் மிகச் சிறந்த சுகாதார கட்டமைப்பினை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *