உள்நாடு

வெசாக் தினத்தை முன்னிட்டு கல்பிட்டி சமுர்த்தி வங்கியின் அன்னதானம் வழங்கும் நிகழ்வு.

வெசாக் தினத்தை முன்னிட்டு கல்பிட்டி சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் மரவள்ளிக் கிழங்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஒன்று நேற்று (22) கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்றது.

கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்பிட்டி சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கல்பிட்டி பிரதேச செயளாளர்ஜே.எம். விமல இந்திக ஜயசிங்க தலைமைதாங்கியிருந்தார்.

அத்துடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த  கல்பிட்டி சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளரும், கல்பிட்டி சமுர்த்தி வங்கியின் பதில் முகாமையாளருமான தினூஷா மதுரங்கி பெர்ணான்டோ, கல்பிட்டி சமுர்த்தி வங்கிச் சங்க சமூக அபிவிருத்தி உதவியாளர் டபல்யூ. அன்டன் சமந்த பெர்ணான்டோ, சமுர்த்தி வங்கிச் சங்க திட்ட உதவி மேலாளர் பி.டி.எம்.எம். தாஸ் மற்றும் கல்பிட்டி சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்கள், கல்பிட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டச் சபை தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் இவ் அன்னதான நிகழ்வில் பிரதேச செயலக வீதியால் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பாதாசாரிகள் பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.


(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *