உள்நாடு

வட்டார வேட்பாளரின் கோரிக்கை ஏற்பு..!

கிண்ணியா பிரதேச சபைக்கு கடந்த 2024/04/16ம் திகதி நடு ஊற்று கிராம உத்தியோகத்தர் பிரிவின் முன்னால் நடு ஊற்று வட்டாரத்தின் வேட்பாளர் பைசர் இஸ்மாயில் குறித்த வட்டாரத்தில் பல தெரு மின் விளக்குகள் செயலிழந்து கிடப்பதாகவும். இதனால் மக்கள் இரவு நேரங்களில் பல சிரமங்களையும் நாளாந்தம் எதிர் கொள்வதாகவும் பிரதேச சபையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து இன்று 2024/05/22ம் திகதி தெரு மின் விளக்குகள் சீர் செய்யப்பட்டும் முழுமையாக செயலிழந்த மின் விளக்குகளுக்கு பதிலாக புதிய இணைப்புகளும் பொருத்தப்பட்டது.

நடு ஊற்று வட்டாரம் 6 ஊர்களை உள்ளடக்கிய வட்டாரம் இதில் முதல் கட்டமாக 3 ஊர்களுக்கு செயலிழந்த மின் விளக்குகளுக்கு பதிலாகவும் புதிய இணைப்புகளும் பொருத்தப்பட்டது. இதில் குட்டியா குளம், ஏழு புளியடி மற்றும் நடு ஊற்று முற்பகுதிகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டது.

எதிர் வரும் நாட்களில் மிகுதி 3 ஊர்களுக்கும் இதே போன்ற தெரு மின் விளக்குகள் இணைக்கப்படும் என்று பைசர் இஸ்மாயில் மேலும் கூறினார்.

இந்த இணைப்புகளை பொருத்தி தந்த கிண்ணியா பிரதேச சபை மின் இணைப்பு ஊழியர்களுக்கும் சபையின் செயலாளருக்கும் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *