உள்நாடு

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரைசிக்கு 2 நிமிட மெளன அஞ்சலி.

இன்று பாராளுமன்றம் கூடிய போது ஹெலி விபத்தில் மரணமடைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான வேண்டுகோளை முன் வைத்த போது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலங்கையில் இறுதியாக வருகை தந்த வெளிநாடு தலைவர் மட்டுமல்லாது உமா ஓயா திட்டத்தை இலங்கைக்கு பெற்றுத் தருவதில் பெரிதும் அக்கறை காட்டியவர் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *