உள்நாடு

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு உக்குவளை அஹதிய்யா மாணவர்களால் ஒத்திகை நிகழ்வு..!

மாத்தளையில் 21 முதல் 27 திகதிவரை நடைபெறவிருக்கும் தேசிய வெசாக் தினத்தைமுன்னிட்டு, இனநல்லுறவை வளர்க்கும் வகையில் புத்தசாசன அமைச்சும், முஸ்லிம் கலாசார திணைக்களமும் இணைந்த ஏற்பாட்டில் மாத்தளை,  உக்குவளை,  வரக்காமுர, ரத்தொட்டை, ஆகிய பகுதிகளின் அஹதிய்யா பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும் கலாசார நிகழ்வுகளுடன் மாத்தளை முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலிருந்து கொடிகள் ஏந்தியவாறான நடைபவனி மாத்தளை எம்.சீ பெளத்த நிலையம் வரை நடைபெறவுள்ளன.

இதுகுறித்த உக்குவளை அஹதிய்யா மாணவர்களுக்கு  ஒத்திகை நிகழ்வு உக்குவளை அஜ்மீர் மண்டபத்தில் அஹதிய்யா அதிபர் எம்.எஸ்.ஹலீம்தீன் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இதன்போது அஹதிய்யா தலைவர் எம்.அபூபக்கர் மற்றும் சக ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றோர் கலந்துகொண்டனர்.

 

(உக்குவளை ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *