உள்நாடு

கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட இவ்வருட இலங்கை ஹாஜிகளின் முதலாவது விமானம்..!

இவ்வருட புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும்  இலங்கை ஹாஜிகளின்  முதலாவது தொகுதியினரை ஏற்றிய விமானம் இன்று  (21) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
முதலாவது தொகுதி ஹாஜிகளை வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் புத்தசாசன மத மற்றும் சலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, ஹஜ் குழுத் தலைவர் இப்ராஹிம் அன்ஸார் உள்ளிட்ட ஹஜ் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.நிலோபர் உள்ளிட்ட ஹஜ் முகவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இம்முறை இலங்கையில் இருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சுமார் 3500 பேருக்கு சவுதி அரசு கோட்டா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *