உள்நாடு

ரைசி தொடர்பில் மனோவின் முகநூல் பதிவு.

மத்திய கிழக்கின் சமநிலை பேண பலமான ஈரான் வேண்டும். உலக சமநிலை பேண பலமான ரஷ்யா வேண்டும் என்று இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது முகநூல் பதிவில் “அவ்வந்த நாடுகளின் உள்ளக சிக்கல்கள், “ஜனநாயக” அளவுகோல்கள் ஆகிய புள்ளிகளை புறம் தள்ளி விட்டு, நாம் உலக வரை படத்தை பார்க்க வேண்டும் என்பது தவிர்க்க முடியா உலக ஒழுங்கு (World Order) துன்பம்.

ஆகவே புட்டினும் வேண்டும். ரைசியும் உலகுக்கு வேண்டும். மத்திய கிழக்கின் பல பெரும்புள்ளி நாட்டு தலைகளுக்கு இருக்காத முதுகெலும்பு ரைசிக்கு இருந்தது.

அதே, சதாமுக்கும் இருந்தது. கடாபிக்கும் இருந்தது. இன்று இந்த ஓட்டை விழுந்து விட்டது. இது தற்செயல் என நம்ப வாய்ப்பு இல்லை. சமநிலை உடைந்தால், ஒரு தரப்பின் ஏகாதிபத்தியம் ஓங்கி விடும்.

இன்று ஏதோ சமநிலை இருக்கிறது என நாம் கருதுகின்ற வேளையிலேயே மேற்குலக “செல்ல பிள்ளை” இஸ்ரேலின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.” என்றும் மனோ கணேசன் அதில் பதிவு செய்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *