உள்நாடு

மருதானை ஷாதுலிய்யா ஸாவியாவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள முஹம்மத் அல் பாஸி அரபுக் கல்லூரி..!

மருதானை ஷாதுலிய்யா ஸாவியாவில் முஹம்மத் அல் பாஸி அரபுக் கல்லூரி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட நடவடிக்கையாக பகுதிநேர வகுப்புகள் இடம் பெறும். இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று 20.05.2024 திகதி சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி அதிபர் மௌலவி முஹம்மத் பைசல் (ஸக்காபி), அகில இலங்கை ஜம்மியல் உலமாவின் நிறைவேற்று குழு உறுப்பினரும் சீனன் கோட்டை பள்ளிச்சங்க இணைச் செயலாளருமான கலீபதுஷ் ஷாதுலி, அல்ஹாஜ் அஷ் ஷெய்க் இஹ்ஸானுதீன் அபுல் ஹஸன் (நளீமி),
சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலி கலாபீட பணிப்பாளர் கலீபதுஷ் ஷாதுலி, மௌலவி அல்ஹாஜ் பஸ்லான் ஜெசூல் (அஷ்ரபி-பீ.ஏ), முஸ்லிம் விவாகப் பதிவாளரும் மொல்லியமலை ஹில்ரியா பள்ளிவாசல் கதீபுமான மௌலவி அல்ஹாஜ் எம்.எஸ்.எம் பாஸில் (அஷ்ரபி), மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் இமாமும் கல்லூரி உதவி உஸ்தாதுமான மௌலவி முஹம்மத் நிஷாத் (அலவி),
அப்ரார் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் அல்ஹாஜ் அதாவுல்லா அபுபக்கர், நிர்வாக சபை உறுப்பினர் அல்ஹாஜ் ரிஸா ஜெசூல் ஸாவியா, நிர்வாக சபை உறுப்பினர் அல்ஹாஜ் பயாஸ் ஜெசூல், மஸ்ஜிதுல் அப்ரார் ஜும்ஆ பள்ளிவாசல் ஜமாத் சபை பொருளாளர் அல்ஹாஜ் அலாவுதீன் மற்றும் ஹழரா ஜமாத் உறுப்பினர்கள் ஊர் பிரமுகர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

(பேருவளை பீ.எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *