உள்நாடு

நாளை LPL இன் ஏலம்.

5ஆவது லங்கா பிரீமியர் லீக் ரி20 தொடரின் வீரர்கள் ஏலம் நாளை 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஏலத்தில் 420 வீரர்கள் பங்கேற்கவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

நடப்பாண்டிற்கான லங்கன் பிரீமியர் லீக் ரி20 தொடர் எதிர்வரும் ஜுலை மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இத் தொடருக்கான வீரர்கள் ஏலம் நாளை 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இவ் ஏலம் நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பிக்கப்டவுள்ளது. இதனை கடந்த ஆண்டைப் போல இம்முறையும் இந்தியாவின் பிரபல்யமிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான சாரு ஷர்மா தொகுத்து வழங்கவுள்ளார்.

இவ் வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 420 வீரர்கள் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், 18 சுற்றுகளைக் கொண்டதாக இடம்பெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதில் 154 வீரர்கள் இலங்கை வீரர்கள் என்றும், எஞ்சியுள்ள 266 வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5ஆவது லங்கன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்திருந்த போதிலும், அதிலிருந்து 266 வீரர்களே தெரிவு செய்யப்பட்டதாக லங்கன் பிரீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *