உள்நாடு

புஹாரி தக்கியா சேஹு நாயகத்தின் தாயாரின் ஜனாஸா நல்லடக்கம்.

காதிரிய்யத்துன் நபவிய்யா தரீக்கா வின் ஆன்மீக தலைவரும் பேருவளை மாலிகாச்சேனை பைத்துல் முபாரக் வதாருல் முஸ்தபா புகாரி தக்கியாவின் ஷேகு நாயகம் சங்கைக்குரிய அல் ஆலிமுல் பாலில் வஷ் செய்கு காமில் அஷ்செய்க் அஹம்மத் ஆலிம் பின் அஷ்செய்க் முஹம்மத் ஆலிம் கபில வுழ்ழா (காதிரியத்துன் நபவி) அவர்களின் தாயார் 19ஆம் திகதி காலமானார்.

இவர் காதிரியத்துன் நபவிய்யா தரீக்கா வின் ஆன்மீக தலைவராக இருந்து இறையடி சேர்ந்த மர்ஹூம் அஷ் செய்ஹ் முஹம்மத் ஆலிம் பின் அஷ்செய்க் அப்துஸ் ஸமிஹ் ஆலிம் காதிரிய்யத்துன் நபவி (ரஹ்) அவர்களின் மனைவிய்யுமாவார்.

அன்னாரின் ஜனாஸா பேருவளை எலந்தகொடை அஷ் செய்ஹ் முஸ்தபா ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் 19ஆம் திகதி மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனாஸா நல்லடக்கத்தில் ஸாதாத் மார்கள், உலமாக்கள், அரசியல்வாதிகள்,காதிரிய்யத்துன் நபவிய்யா தரீக்கா வின் முக்கியஸ்தர்கள்,முரீத்தீன்கள் உட்பட பெறுமலவிலானோர் பங்குபற்றினர்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *