உள்நாடு

சிறுவர் பூங்கா மற்றும் வாசிப்பு நிலையம் பிரதேச சபையின் கீழ்.

கடந்த 2020ம் ஆண்டு நடுஊற்று சிறுவர் பூங்கா மற்றும் வாசிப்பு நிலையம் கிண்ணியா பிரதேச சபையின் கீழ் பாராதீனப்படுத்தி பொறுப்பேற்று பராமரிக்க நான் அன்று நடுஊற்று கிராம அபிவிருத்தி சங்க தலைவராக இருந்த போது எழுத்து மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இக் காணிகள் கிண்ணியா பிரதேச சபைக்கு பாராதீனப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நில அளவைக்காக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுள்ளது.

இந்த ஏற்பாட்டுக்கு 2020 ஆண்டில் இருந்து தொடர்ந்தும் கிண்ணியா பிரதேச சபைக்கு நேரடி தொடர்புடன் இருந்து முறையான அழுத்தத்தின் காரணமாக இது நடைபெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

மிக விரைவில் மூன்றாவது திட்டம் நடுஊற்று பொது மையவாடியினை கிண்ணியா பிரதேச சபையின் கீழ் பாராதீனப்படுத்தி பொறுப்பேற்று பராமரிக்க ஏற்பாடுகளை நடத்தி கொண்டு வருகின்றேன்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(பைசர் இஸ்மாயில்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *