உள்நாடு

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விஷேட விடுமுறை.

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை (20) விடுமுறை வழங்குமாறு வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் உத்தரவிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பாடசாலைகள் உட்பட பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

இதனை கவனத்திற்கொண்ட மாகாண ஆளுநர் , புத்தளம் மாவட்டச் செயலாளர் மற்றும் வடமேல் மாகாண பிரதம செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளைய தினம் ( 2024 மே 20 ) புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *